''பஸ் பொட்டா'' உள்ளிட்ட மூவர் கைது

''பஸ் பொட்டா'' என அழைக்கப்படும் சமன் ரோஹித பெரேரா உள்ளிட்ட மூவர் கைது

by Bella Dalima 03-03-2018 | 3:57 PM
Colombo (News 1st) பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ''பஸ் பொட்டா'' என அழைக்கப்படும் சமன் ரோஹித பெரேரா உள்ளிட்ட மூவர் கம்பஹா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6.30 அளவில் கம்பஹா பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. சந்தேகநபர்களிடமிருந்து T56 ரக துப்பாக்கியும் ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.