உலர் வலய விவசாயிகளுக்கு களஞ்சியசாலைத் தொகுதிகள்

உலர் வலய விவசாயிகளுக்கான களஞ்சியசாலைத் தொகுதிகளை இவ்வருடத்திற்குள் செயற்படுத்த நடவடிக்கை

by Bella Dalima 03-03-2018 | 4:10 PM
Colombo (News 1st) உலர் வலய விவசாயிகளின் அறுவடைகளைக் களஞ்சியப்படுத்துவதற்காக தற்போது நிர்மாணிக்கப்படும் களஞ்சியசாலைத் தொகுதிகளை இந்த வருடத்திற்குள் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இந்த களஞ்சியத் தொகுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. களஞ்சியசாலையின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் முகாமைத்துவ ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. இதற்கான அதிகாரத்தினை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குவதற்கும், மேற்பார்வை செய்வதற்காகவும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரத்தினை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.