சுற்றிவளைத்த பொலிஸார் மீது தாக்குதல்

ஆனமடுவ பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டோரை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

by Bella Dalima 03-03-2018 | 3:49 PM
Colombo (News 1st)   ஆனமடுவ - தோணிக்கல் பகுதியில் அடையாளந்தெரியாத சிலர் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். நேற்று (02) இரவு 9.30 அளவில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டோரை சுற்றிவளைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்த மூவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.