by Bella Dalima 02-03-2018 | 4:49 PM
Colombo (News 1st)
கொழும்பு மாநகர ஆணையாளர் வி.கே.ஏ. அனுர பதவி நீக்கப்பட்டுள்ளார்.
தென் மாகாண ஆளுனர் கே.ஶ்ரீ. லோகேஸ்வரனினால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரதாஸ நாணயக்காரவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.