ஹம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

ஹம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

by Staff Writer 01-03-2018 | 1:12 PM
COLOMBO (News 1st) - ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பஸ்தரிப்பிடத்திற்குள் ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை செய்வதற்கு சந்தேகநபர்கள் பயணித்த காரின் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் பயணித்த காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய சந்தேகநபர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://www.youtube.com/watch?v=j75dUgNv1yM  

ஏனைய செய்திகள்