காணாமற்போனோர் அலுவலகத்திற்கு 7 பேர் கொண்ட குழு

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு 7 பேர் கொண்ட குழு நியமனம்

by Staff Writer 01-03-2018 | 7:19 AM
COLOMBO (News 1st) - காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்திற்காக 7 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹான் பீ பீரிஸ், நிமல்கா பெர்ணான்டோ, மிராக் ரஹிம், சட்டத்தரணி சோமசிறி லியனகே மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோரை இந்த குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். காணாமற்போனோர் அலுவலகத்திற்கான புதிய குழுவின் உறுப்பினர்களுடைய நியமனக் கடிதங்கள் நேற்று தமக்கு கிடைத்ததாக குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம், எதிர்வரும் வாரங்களில் உறுப்பினர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்து எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டில் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பது தொடர்பிலான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது. இந்த அலுவலகத்தின் ஊடாக , கடந்த காலங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாகவும் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=qb6IKRxULF8