சரத் பொன்சேகா ஜனாதிபதியை சந்தித்தார்

நாடு திரும்பியுள்ள சரத் பொன்சேகா ஜனாதிபதியை சந்தித்தார்

by Bella Dalima 28-02-2018 | 8:14 PM
Colombo (News 1st) அமைச்சர் சரத் பொன்சேகா இன்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். வௌிநாடு சென்று நாடு திரும்பியுள்ள பிரதேச அபிவிருத்தி அமைச்சர் ஃபீல்ட் மார்‌ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியை அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் பின்னர் அங்கிருந்து வௌியேறிச் சென்ற போது, ஊடகங்களுக்கு அவர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவிக்கு சரத் பொன்சேகாவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.