by Staff Writer 28-02-2018 | 10:19 AM
COLOMBO (Newsfirst) - சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகங்கள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரிடமிருந்து விரைவான தீர்வொன்றை எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.