நாட்டரிசி 38 ரூபா, சம்பா ​41 ரூபாவுக்கு கொள்வனவு

நாட்டரிசியை 38 ரூபாவுக்கும் சம்பா, கீரி சம்பாவை ​41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

by Bella Dalima 28-02-2018 | 3:45 PM
Colombo (Newsfirst) சிறுபோக நெற்செய்கைக்கு துரிதமாக உரம் விநியோகித்தல் தொடர்பில் திட்டமொன்றை வகுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 5 இலட்சம் ஹெக்டெயர் வரையிலான விவசாய நிலங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் இருந்து உரம் விநியோகிக்கப்படவுள்ளது. வழமையான நடைமுறைகளைப் பின்பற்றி கொள்வனவு செய்யும் உரத்தை இந்த காலப்பகுதிக்குள் விநியோகிப்பதில் சிக்கல் நிலவுவதால் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை விவசாயிகளிடம் இருந்து நிர்ணய விலையில் பெற்றுக்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 1 கிலோ நாட்டரிசியை 38 ரூபாவுக்கும் சம்பா மற்றும் கீரி சம்பா ஆகியவற்றை ​41 ரூபாவுக்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.