மின்சார கொள்வனவிற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல்

அவசர தேவைகளுக்காக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

by Staff Writer 28-02-2018 | 1:45 PM
COLOMBO (Newsfirst) - அவசர தேவைகளுக்காக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு சமர்ப்பித்துள்ளது. இதற்காக 250 கோடி ரூபா நிதியொதுக்குமாறு கோரி குறித்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலவும் வறட்சியான வானிலை மற்றும் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தனியார் துறையினரிடமிருந்து உடனடியாக 100 மெகாவோட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.