நுண்கடன் திட்டங்களுக்கு யாழில் எதிர்ப்பு

நுண்கடன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கண்டனப் பேரணி

by Staff Writer 27-02-2018 | 12:49 PM
COLOMBO (Newsfirst) - அதிகரித்த நுண்கடன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் கண்டனப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்திலிருந்து மாவட்ட செயலகம் வரை இந்த கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். நுண் கடன் திட்டங்களாலும், அதிகரித்த வண்டி சுரண்டல்களாலும் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தமது கோரிக்கைகளடங்கிய மகஜரை மாவட்ட செயலாளருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் மக்கள் கையளித்துள்ளனர்.