பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 2564 பேர் கைது

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 2564 சந்தேகநபர்கள் கைது

by Bella Dalima 24-02-2018 | 4:23 PM
Colombo (Newsfirst) இன்று அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 2564 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 720 பேர் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. அதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 504 பேரும் அனுமதியின்றி துப்பாக்கிகளைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 741 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானத்தை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் 524 சந்கேநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். குற்றத்தடுப்பு மற்றும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் 16,256 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.