குவைத்திலிருந்து வௌியேற பொதுமன்னிப்புக்காலம்

சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் வௌியேற வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலம் நீடிப்பு

by Bella Dalima 24-02-2018 | 3:30 PM
Colombo (Newsfirst) சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள் அங்கிருந்து வௌியேறுவதற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரை பொதுமன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குவைத்திற்கான இலங்கை தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இந்த காலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் குவைத்திலிருந்து வௌியேறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.