by Bella Dalima 23-02-2018 | 3:57 PM
Colombo (News1st)
கம்பளை - தங்கொல்ல பகுதியிலுள்ள பாடசாலையில் ஆசிரியரொருவரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரே ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
மாணவியின் காதில் தாக்கப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மாணவி தற்போது கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று தங்கொல்ல பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் அதிபரொருவர் நடத்திய தாக்குதலில் 4 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர், மாணவர்கள் வௌியேறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.