பசிலுக்கு எதிரான வழக்கு பரிசீலிக்கப்படவுள்ளது

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு பரிசீலிக்கப்படவுள்ளது

by Bella Dalima 23-02-2018 | 4:53 PM
Colombo (Newsfirst) திவி நெகும நிதியை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துட்டுவ இந்த தீர்மானத்தை அறிவித்தார். திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவும் இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவராவார். திவி நெகும திணைக்களத்தின் நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் கித்சிறி ரணவக்க ஆகியோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 365 இலட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.