by Bella Dalima 23-02-2018 | 6:41 PM
9 வருடங்களின் பின்னர் இன்று நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தல் சற்று முன்னர் நிறைவுக்கு வந்தது.
தேசிய ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக சுரேஸ் சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தலில் அவருக்கு ஆதரவாக 18 விளையாட்டு சங்கங்கள் வாக்களித்துள்ளன.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரொஹான் பெர்னாண்டோவிற்கு ஆதரவாக 12 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளராக மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவாகியுள்ளார்.