அவன்ற்கார்ட்  வழக்கு: கோட்டாபய ​மேன்முறையீடு

அவன்ற் கார்ட் வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஸ ​மேன்முறையீடு

by Bella Dalima 23-02-2018 | 10:26 PM
Colombo (Newsfirst)  அவன்ற் கார்ட் வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட சந்தேகநபர்கள் 8 பேர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாம் தாக்கல் செய்த திருத்த மனுவை நிராகரித்து, உத்தரவை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது. தமது தரப்பு சட்டத்தரணியின் அடிப்படை எதிர்ப்பு மனுவை கொழும்பு பிரதம நீதவான் நிராகரித்தமையால், கொழும்பு மேல் நீதிமன்றத்தை கோட்டாபய ராஜபக்ஸ நாடினார். அவன்ற் கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் களஞ்சியசாலையை நிர்வகிக்க அனுமதியளித்து, அரசிற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்