மத்திய அதிவேக வீதி:ஒப்பந்தம் ஜப்பான் நிறுவனத்திடம்

மத்திய அதிவேக வீதி: ஒப்பந்தத்தை ஜப்பான் நிறுவனத்திடம் ஒப்படைக்க அனுமதி

by Staff Writer 22-02-2018 | 8:46 AM
COLOMBO (Newsfirst) - மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மானப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஜப்பானின் தய்ஷே நிறுவனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, பொத்துஹர தொடக்கம் ரம்புக்கன ஊடாக கலகெதர வரையான 32.5 கிலோமீற்றர் வீதி நிர்மானிக்கப்படவுள்ளது. இதற்காகா 100 பில்லியன் ஜப்பான் யென்னை வழங்குவதற்கு ஜப்பானின் மிட்சுபிஷி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.