உயர்தரப்பரீட்சை: விண்ணப்பங்கள் ஏற்கும் இறுதி நாள்

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு

by Staff Writer 22-02-2018 | 7:27 AM
COLOMBO (Newsfirst) - 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய நாளைய தினத்திற்குள் கிடைக்கக்கூடிய வகையில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிடுகின்றார்.