SAITMமாணவர்கள் கொத்தலாவல பல்கலையில் இணைக்கப்படுவர்

SAITM மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைக்கத் தீர்மானம்

by Bella Dalima 21-02-2018 | 10:26 PM
Colombo (Newsfirst) மாலபே SAITM தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் சட்ட மா அதிபர், கொத்தலாவல கல்லூரியின் உபவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். SAITM தனியார் மருத்துவக் கல்லூரியில் தற்போது கல்வி கற்கும் சுமார் 1000 மாணவர்களின் தகைமைகளைப் பரிசீலித்து, அதற்கமைய கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

ஏனைய செய்திகள்