ECTA கலந்துரையாடலை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

ECTA உடன்படிக்கை தொடர்பான இந்திய - இலங்கை கலந்துரையாடலை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 21-02-2018 | 7:44 PM
  Colombo (Newsfirst) தொழிலாளர் தேசிய முன்னணியினர் இந்திய உயர்ஸ்தானிகராலய முன்றலில் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். ECTA உடன்படிக்கை தொடர்பான இந்திய - இலங்கை கலந்துரையாடலை நிறுத்துமாறு கோரி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ECTA உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கடிதமொன்றும் கையளிக்கப்பட்டது.