by Staff Writer 20-02-2018 | 10:24 AM
COLOMBO (Newsfirst) - குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நேற்று (19) நடைபெற்ற பெண்களுக்கான ஐஸ் ஹொக்கி அரையிறுதிப் போட்டிக்கு அமெரிக்க அணி 5-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
23 ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடைபெற்று வருகின்றது.
இதில் நேற்று நடந்த ஐஸ் ஹொக்கி போட்டியின் பெண்கள் பிரிவு அரையிறுதியில் அமெரிக்கா-பின்லாந்து அணிகள் மோதின.
இதில் அமெரிக்க அணி 5-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதிப்போட்டியில் கனடா அணி 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் அமெரிக்கா-கனடா அணிகள் மோதவுள்ளன.
வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் பின்லாந்து-ரஷ்யா அணிகள் மோதுகின்றன.