பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

ஆணைக்குழுவின் அறிக்கைகள் தமிழ் மொழியில் இல்லாமையால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

by Staff Writer 20-02-2018 | 2:06 PM
COLOMBO (Newsfirst) - முறிகள் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும், பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் தமிழ் மொழியில் இல்லாமையால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகளின் பிரதிகள் தமிழ் மொழியில் இல்லை என எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றில் தெரிவித்ததையடுத்து நாளை (21) பிற்பகல் ஒருமணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். மேலும் இந்த அறிக்கைகளின் பிரதிகளை தமிழ் மொழியில் அச்சிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.