by Staff Writer 19-02-2018 | 7:41 PM
COLOMBO (Newsfirst) - அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான மறைந்த கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு பெரும் திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பம்பலப்பிட்டி சென்.ஜோசப் ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் பூதவுடலுக்கு பெருமளவிலானவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான கந்தையா நீலகண்டன் தனது 70 ஆவது வயதில் நேற்று காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை மாலை இடம்பெறவுள்ளன.
https://www.youtube.com/watch?v=5hi1XlU9_c4