ஈரான் விமான விபத்து: தேடுதல் பணிகள் இடைநிறுத்தம்

ஈரான் விமான விபத்து: சடலங்களை தேடும் பணிகள் இடைநிறுத்தம்

by Staff Writer 19-02-2018 | 5:11 PM
COLOMBO (Newsfirst) - ஈரானில் விமானம் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்ட 66 பேரின் உறவினர்களும் தமது சொந்தங்கள் குறித்த தகவல்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகின்ற நிலையில் இதுவரையில் எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை என் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதிக மழை மற்றும் பனி காரணமாக நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கை தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. டெஹ்ரானில் இருந்து சுமார் 480 கி.மீ தொலைவில் செமிரோம் மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளனதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.