பா. உறுப்பினர்கள்  ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

by Staff Writer 18-02-2018 | 9:17 PM
COLOMBO (Newsfirst) - ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி வருகின்றனர். ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர், ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இருந்து வௌியேறியதன் பின்னர் அவர்கள் இந்த கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர். அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரையாடலுக்காக ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்குள் பிரவேசித்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.