ஈரானில் விமான விபத்து: 66 பேர் பலி

ஈரானில் விமான விபத்து: 66 பேர் பலி

by Staff Writer 18-02-2018 | 3:01 PM
COLOMBO (Newsfirst) - ஈரான் நாட்டின் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு 66 பயணிகளுடன் சென்ற விமானம் நொறுங்கி வீழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்த 66 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. ATR-72 என்ற அந்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது, வானில் பறந்து கொண்டிருக்கும் போதே ரேடாரில் இருந்து விமானம் மாயமானது. இதனை அடுத்து, டெஹ்ரானில் இருந்து 480 கி.மீ தொலைவில் தென்மேற்கு பகுதியில் உள்ள செமிரோம் மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி வீழ்ந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.