ஆறு மாதங்களில் முடிவுகளை காண்பிப்பேன்

ஆறு மாதங்களில் முடிவுகளை காண்பிப்பேன் - சரத் பொன்சேகா

by Staff Writer 18-02-2018 | 7:58 PM
COLOMBO (Newsfirst) - நாட்டில் தற்போது பல்வேறு அரசியல் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதனுடன் தொடர்புபடும் விதத்தில் அடுத்த, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் யார் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. இது தொடர்பில் அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.... சரத் பொன்சேகா..... ''கடந்த அரசாங்கத்தில் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையினாலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, எனக்கு வழங்கினால் ஆறு மாதங்களில் முடிவுகளை காண்பிப்பேன்.'' ரஞ்சன் ராமநாயக்க... ''எனக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி அல்லது பிரதியமைச்சர் பதவியையாவது வழங்கினால் கட்சி பேதம் இன்றி திருடர்களை உள்ளே அடைப்பேன் எனக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை என்பதால் அச்சமின்றி அதற்காக செயற்பட முடியும்.''