வெலிக்கடை சிறைக்கலவரம்: மனு பரிசீலிக்கப்படவுள்ளது

வெலிக்கடை சிறைச்சாலையில் 27 பேர் கொலை: ஆணையீட்டு உத்தரவு கோரும் மனு பரிசீலிக்கப்படவுள்ளது

by Bella Dalima 15-02-2018 | 5:22 PM
  Colombo (Newsfirst) வெலிக்கடை சிறைச்சாலையில் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த மாதம் 05 ஆம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இதனை அறிவித்தது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுதேஷ் நந்திமால் என்பவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பத்மன் சூரசேன, நீதிபதி சிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மற்றும் அதற்கு ஆலோசனை வழங்கியவர்கள் ஆகியோரை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கான ஆணையீட்டு உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது