by Bella Dalima 15-02-2018 | 7:10 PM
Colombo (Newsfirst)
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஆலோசகராக மன்னார் மறை மாவட்ட புதிய ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் புதிய ஆலோசகரை வரவேற்கும் நிகழ்வு பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சர்வமதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய மன்னார் ஆயர், மதங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைத் தடுக்க ஒன்றாகக் கைகோர்த்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.