ஐ.தே. கட்சியின் மற்றுமொரு உள்ளக கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு உள்ளக கலந்துரையாடல்

by Staff Writer 15-02-2018 | 11:14 AM
ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு உள்ளக கலந்துரையாடல் அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. கட்சியின் உள்ளகப் பிரச்சினை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படுகின்றது. இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றி இந்த நெருக்கடிக்கான தீர்வை பெற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தும் முதலாவது நடவடிக்கையாகவும் கட்சியை மறுசீரமைப்பது இரண்டாவது நடவடிக்கையாகவும் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த கலந்துரையாடல் தொடர்பிலான மேலதிக தகவல்களை தொடர்ந்தும் எதிர்பாருங்கள்