by Staff Writer 15-02-2018 | 1:24 PM
COLOMBO (Newsfirst) - உபாதைக்குள்ளான அசேல குணரத்ன பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அசேலவுக்கு பதிலாக அணியில் இணைக்கப்படும் வீரர் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.