ஶ்ரீலங்கன், மிஹின்லங்கா முறைகேடு:ஆணைக்குழு நியமனம்

ஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா விமான நிறுவன முறைகேடுகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

by Bella Dalima 14-02-2018 | 8:19 PM
Colombo (Newsfirst) ஶ்ரீ லங்கன் விமான சேவை, ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி E.A.G.R. அமரசேகர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் M.D.A. ஹரல்ட் மற்றும் இலங்கை கணக்காய்வு மற்றும் கணக்காய்வு தர ஆய்வு சபையின் பணிப்பாளர் நாயகம் W.J.K. கீகனகே ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். இந்த ஆணைக்குழு 2006 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதியில் இருந்து 2018 ஜனவரி 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.