நாடு திரும்பினார் கோட்டா

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பினார்

by Staff Writer 12-02-2018 | 11:58 AM
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். அமெரிக்காவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தார். அரசியலில் ஈடுபடுவது குறித்து தாம் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இதன் போது பதிலளித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் பிரதமர் பதவி வழங்கப்படும் பட்சத்தில் நீங்கள் அதனை பொறுப்பேற்பீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் தான் அமெரிக்க பிரஜை என்பதனால் அந்த பொறுப்பை வகிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார். https://www.youtube.com/watch?v=kNxybvkywFQ