புத்தளத்தில் அரசியல் கட்சிகளிடையே மோதல்

புத்தளத்தில் அரசியல் கட்சிகளிடையே மோதல்: மூவர் காயம்

by Staff Writer 10-02-2018 | 11:33 AM
COLOMBO (Newsfirst) - புத்தளம் விருதோடை பகுதியில் இரண்டு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே நேற்றிரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. மோதல் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். புத்தளம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.