அலோசியஸ், கசுனுக்கு பிணை வழங்க கடும் ஆட்சேபனை

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவிற்கு பிணை வழங்க சட்ட மா அதிபர் திணைக்களம் கடும் ஆட்சேபனை

by Bella Dalima 09-02-2018 | 3:48 PM
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேனவிற்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவிப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இதற்கமைய, பிணை மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முன்னெடுப்பதற்கான உத்தரவை கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன பிறப்பித்தார். ​ குற்றவியல் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தி, நம்பிக்கையை சீர்குலைத்தமை, பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முறையற்ற பயன்பாடு, குற்றத்தை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்கள் சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இருவரும் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.