நாடு எதிர்நோக்கியுள்ள கடன் தொகை 10 ட்ரில்லியன்

நாட்டின் கடன் பெறுமானத்தை உறுதியாக மதிப்பிட முடியாதுள்ளது - கணக்காய்வாளர் நாயகம்

by Staff Writer 08-02-2018 | 12:04 PM
COLOMO (Newsfirst) - நாட்டின் கடன் பெறுமானத்தை உறுதியாக மதிப்பிட முடியாதுள்ளது என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணக்காய்வாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார். ''இரு கைகளையும் கட்டி கடலில் வீழ்த்தப்பட்டவரைப் போன்ற நிலை. நாடு அடைந்துள்ள கடன் தொகை எவ்வளவு என யாரேனும் கேட்பார்களாயின், அதனை தேவலோகத்திலிருப்பவர்களிடமே கேட்க வேண்டும் என பதிலளிப்பேன்.அந்தளவிற்கு கடந்த தசாப்தத்தில், அரச நிறுவனங்களின் நிதி முகாமைத்துவத்தில் சிக்கல்தன்மை ஏற்பட்டுள்ளது.'' https://www.youtube.com/watch?v=dgl79dURKs0