தேர்தலுக்காக மதுபான நிலையங்கள் மூடல்

தேர்தல் தினத்தில் அனைத்து மதுபான நிலையங்களையும் மூட நடவடிக்கை

by Bella Dalima 08-02-2018 | 5:25 PM
கொழும்பு (நியூஸ்ஃபெஸ்ட்) எதிர்வரும் சனிக்கிழமை (10) நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த தினத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஹெலன் மீகஸ்முல்ல தெரிவித்தார்.