தேயிலைத்தூள் தயாரிப்பில் கலப்படம்

தேயிலைத்தூள் தயாரிப்பில் கலப்படம் இடம்பெற்றமை கண்டுபிடிப்பு

by Staff Writer 08-02-2018 | 1:53 PM
COLOMBO (Newsfirst) - தேயிலைத்தூள் தயாரிப்பு சீனி கலப்படம் செய்து, சுவையை மாற்றி சந்தையில் விற்பனை செய்யும் சட்டவிரோத செயற்பாட்டை இலங்கை தேயிலை சபை கண்டுபிடித்துள்ளது. அண்மையில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரண்டு தேயிலை தொழிற்சாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய , குறித்த இரண்டு தேயிலை தொழிற்சாலைகளின் தேயிலை தூள் தயாரிப்பு பணிகளை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட தெரிவித்துள்ளார். குறித்த தொழிற்சாலைகளில் சீனியை சூடாக்கி தேயிலையுடன் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.