சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை

சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை

by Staff Writer 08-02-2018 | 9:39 AM
COLOMBO (Newsfirst) - தேர்தல் கடமைகளுக்காக கொழும்பிலிருந்து விசேட குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று செல்லவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேட இணைப்பாளர்களாக கடமையாற்றவுள்ள தெரிவத்தாட்சி அலுவலர்களே இவ்வாறு செல்லவுள்ளதாக மேலதிக தேர்த்லகள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிடுகின்றார் 400 அதிகாரிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செல்லவுள்ளனர். தேர்தலில் வாக்குப்பதிவு நிலையங்களை ஒருங்கிணைப்பதற்காக இந்த அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரச வாகனங்களை உடனடியாக விடுவிக்குமாறும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 04 நாடுகளிலிருந்து சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.