முள்ளியவளை பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள்

முள்ளியவளை பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

by Staff Writer 07-02-2018 | 9:56 AM
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று மீண்டும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளால் தங்கம், வெடிப் பொருட்கள், ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதியிலேயே இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றது. முல்லைத்தீவு நீதவான் லெனின் குமார் முன்னிலையில் இந்த பணிகள் இடம்பெற்றன. எனினும் எவ்வித பொருட்களும் இந்த அகழ்வின் போது கண்டு பிடிக்கப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.