by Bella Dalima 06-02-2018 | 5:24 PM
நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், நயன்தாரா நடிக்கும் அடுத்த 2 படங்களின் அறிவிப்பு ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டோரா, அறம், வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் வௌியாகின.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், நயன்தாராவின் `இமைக்கா நொடிகள்', `கோலமாவு கோகிலா' படங்களின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளன.
த்ரில்லர் கதையாக உருவாகும் `கொலையுதிர் காலம்' படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இதுதவிர, அறிவழகன் இயக்கும் த்ரில்லர் கதையிலும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக `நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்கிறார். இன்னொரு தெலுங்குப் பட வாய்ப்பும் வந்திருக்கிறது.
இந்நிலையில், நயன்தாரா நடிக்கவிருக்கும் அடுத்த இரு படங்கள் குறித்த அறிவிப்பு நேற்று ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, நயன்தாரா அடுத்ததாக அஜித் ஜோடியாக `விஸ்வாசம்' படத்திலும், `லெக்ஷ்மி', `மா' குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் த்ரில்லர் கதையிலும் நடிக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது. `
'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகிறது.