பாராளுமன்ற வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஊழலுக்கு எதிரான முன்னணி, சிவில் அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

by Staff Writer 06-02-2018 | 1:20 PM
ஊழலுக்கு எதிரான முன்னணி மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியன இன்று முற்பகல் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறிகள் மோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றத்திற்கு செல்லும் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.