வறுமை, இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்

வறுமை, இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார சவால் - ஜனாதிபதி

by Staff Writer 04-02-2018 | 4:54 PM
வறுமை, இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார சவால் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். இலஞ்சம், ஊழல், திருட்டு என்பன நாட்டின் எதிர்காலத்தை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இவற்றை இல்லாதொழிப்பதற்கு அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக செயற்பட வேண்டியது காலத்தின் தேவை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற 70 ஆவது சுதந்திர தின விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.