சீகிரியா சுவரில் மீண்டும் பங்கசு

சீகிரியா தொன்மை வாய்ந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள சுவரில் மீண்டும் பங்கசு

by Staff Writer 04-02-2018 | 1:35 PM
சீகிரியா தொன்மை வாய்ந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள சுவரில் மீண்டும் பங்கசு பரவியுள்ளது. குறித்த சுவரின் பல்வேறு இடங்களில் பங்கசு காணப்படுவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆலோசனையின் பிரகாரம் பங்கசு பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீகிரியா குன்றை சூழவுள்ள மரங்களில் பரவிய பங்கசு தொன்மை வாய்ந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள சுவரில் பரவியுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.