அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன விளக்கமறியலில்

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன விளக்கமறியலில்

by Staff Writer 04-02-2018 | 11:01 PM
இன்று காலை கைது செய்யப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அவர்கள் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி முறிகல் மோசடி தொடர்பிலான விசாரணை குறித்து கடந்த வௌ்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ,அர்ஜுன் அலோசியஸ். கசுன் பாலிசேன, அர்ஜுன் மகேந்திரன் ஆகியோரை சந்தேகநபர்களாக அறிவித்தது.  

ஏனைய செய்திகள்