ஹங்கேரியில் ஓவியம் தீட்டும் இந்திய யானை

ஹங்கேரியில் ஓவியம் தீட்டும் இந்திய யானை

ஹங்கேரியில் ஓவியம் தீட்டும் இந்திய யானை

எழுத்தாளர் Bella Dalima

06 Nov, 2017 | 4:42 pm

ஹங்கேரியின் புடாபஸ் நகரில் சர்க்கஸ் நிறுவனத்தில் உள்ள இந்திய யானை ஒன்று வண்ண ஓவியங்கள் தீட்டும் காட்சி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன் இந்த சர்க்கஸுக்கு 2 வயது குட்டி யானையாக வந்த அந்த யானையின் பெயர் சான்ட்ரா.

தற்போது சான்ட்ராவுக்கு 42 வயதாகிறது.

சான்ட்ரா யானை கோடுகளை ஓவியமாக்குவதற்கு தனது தும்பிக்கையையே தூரிகையாக்குகிறது.

சான்ட்ரா வரைந்த ஒரு ஓவியம் 150 டொலருக்கு விற்பனையாகியுள்ளது.

யானைகளுக்கு பயிற்சியளித்த ஃப்ளோரியன் ரிக்டர் என்ற பெண்மணி சான்ட்ராவுக்கு தாம் எந்தவித துன்புறுத்தலும் செய்யவில்லை என்றும் அதுவாகவே ஆர்வத்துடன் ஓவியம் கற்றுக்கொண்டுவிட்டது என்றும் கூறியுள்ளார்.

யானை வரைந்த அழகில் சொக்கிப்போகும் பார்வையாளர்கள் அதை ஏலத்தில் எடுத்துச் செல்கின்றனர்.

அப்படித் திரட்டப்படும் தொகை, மலேசியக் காடுகளில் உள்ள யானைகளின் மறுவாழ்வுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.

சர்க்கஸில் உள்ள குதிரைகளுக்கும் ரிக்டர் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.

painting_elephant_848x480_1088623683581

Sandra, a 42-year-old elephant, poses for a photo with Hungarian circus fans who bought her painting in the Florian Richter Circus in Budapest, Hungary November 4, 2017. REUTERS/Laszlo Balogh NO RESALES. NO ARCHIVES


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்