English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
22 Mar, 2017 | 8:20 pm
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து கோட்டை ரயில் நிலைய முன்றலில் இன்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
இதேவேளை, சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினால் கடந்த ஆறு நாட்களாக கோட்டை புகையிரத நிலைய முன்றலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.
காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும், வட, கிழக்கு மாகாணங்களில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என தெரிவித்து யாழ். பஸ் நிலைய முன்றலில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கக்கூடாது என தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Jan, 2021 | 07:53 PM
22 Jan, 2021 | 07:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS