English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
18 Jul, 2016 | 8:42 pm
கூட்டு வன்புணர்விற்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரின் தாயாரே நேற்று இரவு உயிரிழந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.
அதற்கமைய உயிரிழந்தவரின் இறுதி சடங்குகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு , வித்தியாவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்காம் மற்றும் 09 ஆம் இலக்க சந்தேகநபர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதவான் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி சடங்குகளில் சந்தேகநபர்கள் கலந்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் அவருடைய தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு சந்தேகநபரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி வரை சந்தேகபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர் சபேஷன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
22 Jan, 2021 | 05:48 PM
13 Jan, 2021 | 07:06 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS