English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Jan, 2016 | 12:34 pm
எம்பிலிப்பிட்டி நகரத்தில் சிலர் தற்போது பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய நகரில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஏற்பட்ட மோதலின் போது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து கடுங் காயங்களுக்குள்ளான இளைஞன் உயிரழந்தமை தொடர்பில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே ஏராளமான மக்கள் கூடியிருப்பதால் அதனை சூழவுள்ள நகரின் அனைத்து வீதிகளிலும் போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சிலர் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
நேற்று முன்தினம் அதிகாலை விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த பொலிஸார் முயற்சித்த போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலின் போது பொலிஸ் அதிகாரிகள் நால்வர் உட்பட மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
மோதலின் போது மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்த நபர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
11 May, 2022 | 08:08 PM
04 May, 2022 | 04:44 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS